Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
மிக மோசமான கட்டத்தை இலங்கை எட்டப்போகிறது – கடுமையான எச்சரிக்கை
எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் இலங்கை மிகமோசமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
உலகசந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோகிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்கமுடியும்.
ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய முறைகேடான வாய்ப்புக்கள் மற்றும் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் பாரிய சீனிமோசடி ஆகியவற்றின் காரணமாகவே தற்போது ஒருகிலோகிராம் சீனியின் விலை 220 ஆக அதிகரித்துள்ளது.
அதுமாத்திரமன்றி உரியவாறான திட்டமிடல்கள் அற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பயிர்ச்செய்கையும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
எனவே எதிர்வரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் நாடு மிகமோசமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றார்.