Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பயண அனுமதி பத்திரம் – பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுகாதார பணிப்பாளரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியினுள் வீதியில் பயணிக்க கூடிய குழுவினர்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் தெளிவான உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக எந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு ஊரடங்கு அனுமதி பத்திரம் பொலிஸாரினால் வழங்கப்படாதென பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அத்தியாவசிய சேவை என கூறி பல நபர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று ஊரடங்கு அனுமதி பத்திரம் கோருவதாக தெரியவந்துள்ளது. இது பொலிஸாருக்கு நெருக்கடியாக உள்ளதென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வரும் நபர்களுக்கு அனுமதி பத்திரம் பெற முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தொலைகாட்சியில் கூறியதாக பொலிஸ் நிலையத்திற்கு வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவ்வாறு வழங்கப்படாதென்பதனால் பொலிஸ் நிலையங்களுக்கு வரவேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.