Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நாட்டில் 15 மாவட்டங்களில் டெங்கு நோய் அபாயம் அதிகரித்துக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெருமளவு டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில் அதிகூடிய தொகையாக 2,975 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 2,215 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஏனைய 13 மாவட்டங்களில் 891 டெங்கு நோயாளர்கள் காணப்படும் நிலையில்,
களுத்துறை மாவட்டத்தில் 572 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நிலையில் மேலும் 7 மாவட்டங்களில் 200 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தகவலின் படி இந்த வருடத்தில் இது வரை நாட்டில் 10 ஆயிரத்து 155 டெங்கு நோயாளர்கள்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் அதில் எந்த எண்ணிக்கை குறைவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தைப் போன்றே ஏனைய பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் டெங்கு நோயாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.