Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நாட்டில் பயணக்கட்டுப்பாடு நேற்று இரவு 11 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையென பொலிசார் அறிவித்துள்ளனர்.
எனினும் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண ,அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்தில் பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.
அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கூறினார்.