Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பொதுவாகவே மழை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் குழந்தைகளுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம் தான். ஆனால் வீட்டில் உள்ள பெற்றோர் தான் சளி பிடித்துவிடும் என திட்டி தடை போட்டுவிடுவார்கள். ஆனால் இங்கே ஒரு குட்டி பையன் மழைக்கு செம ஆட்டம் போடுகிறார். அவரோடு சேர்ந்து ஒரு வி.ஐ.பியும் ஆட்டம் போடுகிறார். அவர் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது. நாய்கள் எப்போதும் வீட்டில் இருப்பவர்களிடமும் பாசமாக பழகிவிடும். அதேபோலத் தன் வீட்டில் இருக்கும் குழந்தைகளோடு சேர்ந்து நாய்களும் சில நேரங்களில் குறும்புத்தனத்தில் ஈடுபடுவது உண்டு. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீட்டில் உள்ள குட்டிப்பையன் ஒருவன் சாலையில் சோவென மழை கொட்டுவதைப் பார்த்து மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம் போடுகின்றார். அதைப் பார்த்ததும், அவரது வீட்டு நாயும் மழையிலும், தண்ணீர் குழாயின் வழியாக வடிந்தோடிவரும் தண்ணீரிலும் செம ஆட்டம் போடுகிறது. குறித்த இந்த நாயின் ஆட்டம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.